தஞ்சாவூர், மே 16- தஞ்சாவூரில், இரண்டாண்டு களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றி திரிந்த பெண் ஒருவர், தற்போது குணமாகி அவர் குடும்பத்துடன் சேர்ந்துள்ள நெகி ழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமலப்படுத் தப்பட்ட நிலையில், தஞ்சை நகரில், சுற்றித் திரிந்த மனநலம் பாதிக் கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என 120 பேர் மீட்கப்பட்டு மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகளை, மாநகராட்சியுடன் இணைந்து, ரெனிவெல் பவுண்டே ஷன் என்ற அமைப்பினர் செய்து வருகின்றனர். இந்த முகாமில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண் ஒருவர், கடந்த மூன்று நாள்க ளுக்கு முன்பு தான், “திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சித்ரா (32) என்றும், தன் பிள்ளைகளை பார்க்க வேண்டும், உடனே நான் என் வீட்டுக்கு போக வேண்டும், என்னை காணாமல் என் புள்ளைங்க தேடுவாங்க என பவுண் டேஷன் ஊழியர்களிடம் கூற, சித்ரா கூறிய முகவரிக்கு சென்று விசாரித்து போது, உண்மை என்றும் தெரியவந்தது.
அதன் பின்னர் சித்ராவை வியாழக்கிழமை அவரின் வீட்டிற்கு பவுண்டேஷன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அழைத்து சென்றனர். அப்போது சித்ராவை பார்த்த கணவர் ஜெயக்குமார் (45), மகன் கவின் (16), மகள் ரித்திகா (11) ஆகி யோர் இரண்டு ஆண்டு கழித்து பார்த்த மகிழ்ச்சியில், ஒருவொ ருக்கு ஒருவரை கட்டி தழுவிக் கொண்டனர். இது குறித்து ரெனிவல் புவுண்டே ஷன் வீரமணி கூறியதாவது; சித்ரா விற்கு கடந்த சில ஆண்டாக மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரு கிறார். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, குடும்பத்தை மறந்து தஞ்சை யில் சுற்றி திரிந்து கொண்டிருந்துள் ளார். தற்போது முகாமில் தக்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக, எந்த மருந்து, மாத்திரையும் இல்லாமல், அன்பும் அரவணைப்பை மட்டுமே கொண்டு அவர் மனதை மாற்றும் முயற்சி செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது” என்றார்.