tamilnadu

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை 

 தஞ்சாவூர், ஜூலை 23- ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி யன் மகள் இந்துமதி(21), இவருக்கும் சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் சதீஷ்குமார்(28) ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இந்துமதி, ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாமாண்டு படித்து வருவதால், இந்துமதியும், அவரது கணவர் சதீஷ்குமாரும் கல்லூரி அருகே உள்ள எழுத்துக்காரர் தெரு பத்மா காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி னர். சதீஷ்குமார், ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் மெக்கானிக் கடையில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.  வழக்கம் போல் திங்கள்கிழமை வேலைக்கு சென்று விட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார் வீட்டின் கதவை திறந்த போது மனைவி இந்துமதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருமணமாகி ஓராண்டு ஆகிய நிலையில் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் ஒரத்தநாடு காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

;