tamilnadu

மன்னார்குடி , தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்

சி.எம்.ஏ நியமனம்
மன்னார்குடி செப் 21- தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையராக(சி.எம்.ஏ) பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார். பாஸ்கரன் ஏற்கனவே திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை 
தஞ்சாவூர், செப்.21- பட்டுக்கோட்டை நகரத்தில் குண்டும் குழியுமான சாலையை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சு. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்செல்வி, ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் எம். செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ. கோவிந்தசாமி, கே.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.வீரப்பன், கே.சோமசுந்தரம், பி. சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “பட்டுக்கோட்டை நகரத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். மேலும் காரைக்குடி திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் சேவையை தொடங்க வேண்டும். பேருந்து நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்திட சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கந்துவட்டி கொடுமை: பெண் தற்கொலை
திருநெல்வேலி, செப்.21- நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி  சிதம்பரபுரம் வேதநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவ ருடைய மனைவி காந்திமதி (48). இவர் கூலி வேலை பார்த்து  வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது சிலரிடம் அவர்  கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அதற்கு வாரந்தோ றும் அவர் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனா லும் கந்துவட்டிக்காரர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று கந்துவட்டிக்காரர்கள் சிலர் காந்திமதியை அவதூறாக பேசியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த காந்திமதி விஷம் குடித்ததையடுத்து அவரை உறவி னர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிர வுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலன் அளிக்காமல் வெள்ளிக்கிழமை இரவு காந்திமதி உயி ரிழந்தார். இதுகுறித்து களக்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  பெயிண்ட் கடை அதிபர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை திருநெல்வேலி, செப்.21- நெல்லை அருகே ஒரே நாளில் 2 பெயிண்ட் கடை அதிப ர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோத னை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த தேசிய புலனாய்வு  பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை காலை 7 மணியளவில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்கு ழியைச் சேர்ந்த பெயிண்ட் கடை அதிபர் திவான் முஜிபுர் என்ப வரது வீட்டிற்கு சென்றனர். பாதுகாப்பிற்காக தென்காசி மற்றும் வீரவநல்லூர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வீட்டில் நுழைந்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. செல்போனிலும் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்க வில்லை. வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிரடி  சோதனை செய்தனர். கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் குறித்தும் ஆய்வு செய்த னர். திவான் முஜ்புரிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு,  அவர் கூறிய பதில்களை பதிவு செய்தனர். அதுபோல அவ ரது வீட்டில் உள்ள மற்றவர்களிடமும் தனித்தனியாக விசார ணை நடத்தினர். திவான் முஜிபுர் வளைகுடா நாட்டில் வேலை  பார்த்து விட்டு சமீபத்தில்தான் இந்தியா திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை சனிக்கிழமை யும் தொடர்ந்து நடைபெற்றது.  இந்நிலையில் வெள்ளங்குழியைச் சேர்ந்த திவான் முஜிபு ரின் உறவினரான புளியங்குடியை சேர்ந்த மைதீன் என்பவர் புளியங்குடியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். தேசிய  புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் மற்றொரு பிரிவினர் சனிக்கிழமை புளியங்குடிக்கு சென்று அங்குள்ள மைதீன் வீட்டி லும் அவரது பெயிண்ட் கடையிலும் சோதனை நடத்தினர். நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து  விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 டன் கழிவுகள் அகற்றம்
தூத்துக்குடி, செப்.21- தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து சனிக்கிழமை திரேஸ்புரம், வடபுறம் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா காலனி கடற்கரைப் பகுதி கரையோரம் ஒதுங்கிய சுமார் 12 டன் அளவிலான பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தூய்மை பணியுடன் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், காமராஜ் கல்லூரி சுயநிதி பிரிவு தேசிய சமூக திட்டம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.