இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், அக்.16- தஞ்சாவூரில் அக்டோபர் 17 (வியாழக்கிழமை) தஞ்சா வூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக் கும், பகல் 12 மணியளவில் மாற்றுத் திறனாளிகளுக் கான குறைதீர்க்கும் நாள் கூட்டமும் தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில், தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. விவ சாயிகள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் தங்களது கோரிக் கை தொடர்பான மனுக்க ளை அளிக்குமாறு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கை கழுவும் தின நிகழ்ச்சி
அறந்தாங்கி, அக்.16- உலக கை கழுவும் தினத் தை முன்னிட்டு அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களுக் கும் கை கழுவும் அவசி யத்தையும் 6 விதமான கை கழுவும் படிகளையும் செய்து காண்பித்த நிகழ்ச்சி நடை பெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார், உட னடி தலைவர் அபுதாலிபு, பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைசெல்வன், உறுப்பி னர் ரவிசங்கர், நல்லாசிரியர் சிவக்குமார், ஆசிரியர்கள்- மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு
திருவாரூர், அக்.16-திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் காவல் நிலைய பரா மரிப்பு பணிகளை சிறப்பாக செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்க ளுக்கு குற்ற கலந்தாய்வு கூட்டத் தில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.துரை நற்சான்றிழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி னார்.இதில் சட்டம் - ஒழுங்கு பணியை சிறப்பாக செய்து முதலிடத்தை பெற்ற பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி என்பவருக்கும், குற்றத்தடுப்பு பணியை சிறப்பாக செய்த குடவாசல் காவல் ஆய்வாளர் ராஜ கோபால் என்பவருக்கும், காவல் நிலையத்தை சுத்த மாக பராமரிப்பு செய்த மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோருக்கும், முத்துப் பேட்டை விநாயகர் ஊர்வ லத்தின் போது சிறப்பாக பாது காப்பு பணிகளை ஏற்பாடு செய்த முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர் விஜய் லூர்து பிரவீன் ஆகியோருக்கும் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மணமேல்குடி நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை
அறந்தாங்கி, அக்.16- புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடி மார்க்சிஸ்ட் கட்சி கிளை சார்பாக நிதியளிப்பு மற்றும் கோரிக்கை விளக்க பொ துக்கூட்டம் மனமேல்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் எஸ்.சேகர் தலைமை வகித்தார். மனமேல்குடி கிளை சார்பாக வழங்கப்பட்ட நிதியை பெற்று கொண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ் சிறப்பு ரையாற்றினார். கூட்டத்தில் கொசுக்கள் உற் பத்தியாகும் இடமாக மனமேல் குடி ஸ்டேட் பங்க் அருகில் தேங்கி கிடக்கும் மழைநீரை நிரந்தரமாக அப்புறப்படுத்தி சீர் செய்ய வேண்டும். மணமேல்குடி அரு ணாச்சல காவிரி கீரனூர், வெள் ளுர், நெல்வேலி, நல்லி வயல் கோடியக்கரை வரை மராமத்து பணியை செய்ய வேண்டும. மணமேல்குடி வட்டாட்சியர் அலு வலகம் துவங்கி நல்லூர், பொன் ன்னகரம் மற்றும் பல இடங்களில் பேசினர்.