தமிழ்ப் பல்கலை. படிப்புகளுக்குகால நீட்டிப்பு - பதிவாளர் தகவல்
தஞ்சாவூர், ஜூலை 17 - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையின் வழி என்சிடிஇ நிறுவன அனுமதியுடன் நடத்தப் பெற்று வரும் இளங்கல்வியியல் (பி.எட்.,) 2019-21-ம் கல்வியாண்டின் பட்டப் படிப்பு களுக்கான நேரடிச் சேர்க்கை ஜூலை 31-ம் தேதி வரை யும், கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.,) பட்டப் படிப்புக்கான நேரடிச் சேர்க்கை ஆகஸ்ட் 16-ம் தேதி வரையும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சேர்க்கை பல்கலைக்கழக மொழிப்புலக் கட்டி டத்தில் உள்ள கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்கலைக்கழக வேலை நாட்களில் நடைபெறுகிறது. தகுதியுடையோர் தங்களது அனைத்து மூலச் சான்றி தழ்கள் மற்றும் முதல் தவணைக் கட்டணத் தொகை ரூ.20 ஆயிரத்துடன் நேரில் வரலாம். விண்ணப்பத்தினை நேரிலோ, அல்லது www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலும் பதி விறக்கம் செய்து கொண்டு நேரில் வரலாம். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.600, பட்டியல் இனத்த வருக்கு ரூ.300 (உரிய சான்றிதழுடன்). மேலும் அரசு விதி முறைகளின்படி தகுதியுடையோருக்குக் கல்வி உதவித் தொகை பெற வாய்ப்புள்ளது. ஆண், பெண் இருபால ருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு என பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ச.முத்துகுமார் தெரிவித்துள்ளார்.
மனநிலை பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது
கும்பகோணம், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்ப னந்தாள், பரவனுார், புதுத்தெருவை சேர்ந்தவர் அறிவழ கன். விவசாயியான இவருக்கு ராசாத்தி என்ற மனைவி யும், 11-ம் வகுப்பு படிக்கும் ராதா மற்றும் அனிதா என்ற இரண்டு மகள்களும், இளம்பிள்ளை வாதத்தால் முடங்கி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள அனுசியா(20) என்ற மகளும் உள்ளனர். இதில் ராசாத்திக்கு கர்ப்பப்பையில் கேன்சர் நோய் வந்ததால், அவரது கணவர் அறிவழகன், மகள் ராதாவை மட்டும் அழைத்து கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். மகள்கள் அனிதா மற்றும் அனுசியாவுடன் ராசாத்தி தனி யாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராசாத்திக்கு வயிற்று வலி அதிகரித்ததால், கடந்த 5 மாத காலமாக தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ராசாத்தி அவ்வப்போது ஊருக்கு வந்து, மகள்களை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி மனநிலை பாதிக்கப்பட்ட அனுசியா கதறி அழுத சத்தம் கேட்டு வந்த, அக்கம்பத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அனுசியாவிற்கு 5 மாத குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இறந்ததால், அனு சியாவின் உடல்நிலை மோசமானது. இது பற்றி தாய் ராசாத்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராசாத்தி திருப்ப னந்தாள் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் அனுசியா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் புகாரின் பேரில் காவல்துறையினர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை தேடி வந்தனர். இதுகுறித்து தாய் ராசாத்தி கூறுகை யில், அப்பகுதியைச் சேர்ந்த எனது தம்பியின் நண்பன் திருப்பனந்தாள் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவியரசன்(30) என்பவன், எனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளதாகவும், சில நாட்களாக அவன் வருவ தில்லை என்றும் அக்கம்பத்தினர் தெரிவித்தனர். இது குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், போலீசார் கவியரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிராம்பட்டினத்தில் படகு, டீசல் திருட்டு
தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால முருகன்(30), மீனவரான இவர் தனக்கு சொந்தமான பைபர் படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு சக மீன வர்களுடன் கீழத்தோட்டம் துறைமுகம் சென்றுள்ளார். அங்கு மீனவர்கள் தங்களது படகுகள் மூலம் கடலுக்கு செல்ல ஆயத்தமாகினர். அப்போது துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலமுருகனுக்கு சொந்த மான படகும், அதனருகில் உள்ள மற்ற படகுகளில் வைக்கப்பட்டிருந்த, தலா 25 லிட்டர் கொண்ட 2 டீசல் கேன்களும் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோரக் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் கடலோரக் காவல்துறை ஆய்வாளர் சுபா, காவலர் ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி, பைபர் படகு மற்றும் டீசலை திருடிச் சென்றது யார் எனத் தேடி வருகின்றனர்.
மாங்காட்டு நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியில் இளைஞர்கள்
புதுக்கோட்டை, ஜூலை 17- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த மாங்காட்டில் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவதை அனைத்துப் பகுதி யினரும் பாராட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயம், குடி நீருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசா யத்துக்கான ஆழ்துளை கிணறுகளும் செயல் இழந்து வருகின்றன. இந்நிலையில், ஆலங்குடி தாலுகா மாங்காட்டில் நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காக அந்த ஊர் இளைஞர்கள் சார்பில் கடந்த மாதம் 24-ம் தேதி யிலிருந்து குளம், ஏரிகளுக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மொத்தம் உள்ள 10 குளங்களுக்கான வாய்க்கால்களில் 7 குளங்களுக்கான வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மற்ற குளங்களின் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு அரசிடம் நிதி பெற்று குளம், ஏரிகள் தூர்வாரப்படும் என இளைஞர்கள் தெரி வித்தனர். இந்த இளைஞர்களின் சமூகப் பணிக்கு ஆத ரவளிப்பதோடு அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.