தஞ்சாவூர் நவ.14- சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்திற்கான உண்மைக் காரணம் கண்டறியப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உயர்வு வாபஸ் பெற வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், வியாழக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரி விக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அனுமதி மறுத்து போராட்டத்தை நடத்த விடாமல் காவல்துறையினர் அடக்கு முறையில் ஈடுபட்டனர். தடையை மீறி தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மாணவர்களை தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, நகரச் செயலாளர் அருண்குமார், நகரத் தலைவர் சிரில் இமான், துணைச் செயலா ளர் வி.ராஜாராம், மாணவிகள் உபகுழு கன்வீனர் சரண்யா, சரபோஜி கல்லூரி கிளைச் செயலாளர் சக்தி, கிளைத் தலைவர் வீரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.