தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இடப்பிரச்சனையில் மயானச் சாலைக்கு கதவு அமைத்து பூட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றித் தருமாறு பொதுமக்கள் பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமியிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், “பேராவூரணி அருகிலுள்ள தெற்கு நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பலதரப்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஊருக்கு வெளியே அனைத்து சமுதாய மக்களின் மயானக்கரை உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்திரன், ராமையன் மகன் சங்கர் ஆகிய இருவருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சந்திரன் தனது ஆட்களுடன் கடந்த டிசம்பர் 16 அன்று இரவு இரும்பு கதவு அமைத்து பூட்டிவிட்டார். பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு வேலியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.