tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு 600 கி.மீ. மனிதச் சங்கிலி

தஞ்சாவூர் ஜூன். 23- மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட வங்கக் கடலோர மாவட்டங்களில் எழுச்சிமிகு மனிதச் சங்கிலி போராட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். ஹைட்ரோ  கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற நாசகரத் திட்டங்களால் தமிழகத்தின் விவசாயம் பாதிக்கப் படுவதோடு, விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப் பினரும் பாதிக்கப்படும் அபாயம் சூழ்ந்துள்ளது.
வாகனப் பிரச்சார இயக்கம் 
இத்திட்டத்தை கைவிட வேண்டும்; டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சார இயக்கம் ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெற்றது.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை சுமார் 596 கி.மீ தூரத்திற்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. ‘பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு திமுக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், மீனவர் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
நாகை
நாகப்பட்டினம் புத்தூரில் பழைய ரவுண்டானா அருகே 1000-க்கு மேற்பட்டோர்  கலந்து கொண்ட மனிதச் சங்கிலிப் போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளருமான பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி பங்கேற்றனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.முருகையன், பி.டி.பகு,  எம்.சுப்பிரமணியன், ஏ.வேணு, ப.சுபாஸ்சந்திர போஸ், நாகை நகரச் செயலாளர் எம்.பெரிய சாமி, ஆர்.ராமமூர்த்தி, சு.மணி, வி.வி.ராஜா, திமுக நாகைத் தெற்கு மாவட்டச் செயலாளர் என்.கெளதமன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.ராஜேந்திரன் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை- திருவாரூர் மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை வடகாடு முதல் தஞ்சை- புதுக்கோட்டை மாவட்ட எல்லை யான செம்பியன் மாதேவிப்பட்டினம் வரை சுமார் 45 கி.மீ தூரத்திற்கு போராட்டம் நடைபெற்றது. தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் நடை பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, சிஐடியு மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், சிபிஎம் கிளைச் செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அதிராம்பட்டினத்தில் திமுக தஞ்சாவூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செய லாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி கலந்து கொண்டனர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.  சேதுபாவாசத்திரத்தில் மாவட்டக்குழு உறுப்பி னர் வழக்கறிஞர் வீ.கருப்பையா, சேதுபாவாசத்தி ரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சம்பைபட்டி னத்தில் கிளைச் செயலாளர் அப்துல் காதர், சுப்பம்மாள் சத்திரத்தில் சிஐடியு நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் குத்புதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைபட்டினம், மீமிசல் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் திருமயம் எம்எல்ஏ ரகுபதி, திமுக இலக்கிய அணி நிர்வாகி கவிதைபித்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், உடையப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பெரி. குமார
வேல், ஜியாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருக்கடையூர் 
நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், சிபிஎம் முன்னாள் வட்டச் செயலாளர் டி. கோவிந்தசாமி, விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவர் இளையராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.