கும்பகோணம், ஜூலை 16- கும்பகோணம் பள்ளி தீ விபத் தில் இறந்த 94 குழந்தைகளின் 15-வது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப் பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசி ராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந் தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி முன்பாக 94 குழந்தைகளின் படங்களை அலங்கரித்து, பிள் ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கள், அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சின்னை.பாண்டி யன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சா.ஜீவபாரதி, குடந்தை ஒன்றியச் செயலாளர் பி. ஜேசுதாஸ், மாவட்ட குழு உறுப்பி னர் பார்த்தசாரதி, நகரச் செயலாளர் செந்தில்குமார், மாற்றத்தினால் மாற்றுத்திறனாளிகள் சங்கம் மாநில குழு உறுப்பினர் வாசுதேவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளர் செல்வமணி, மாதர் சங்க பொறுப்பாளர் அறிவு ராணி, ஓய்வூதியர் சங்க பொறுப்பா ளர்கள் ராஜகோபாலன், அன்பு மணி, பக்கிரிசாமி, வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் அருளரசன், ரஞ்சித், சரத்ராஜ், ஆட்டோ நகரத் தலைவர் தாடி.சாமிநாதன் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத் திற்குச் சென்று மவுன அஞ்சலி செலுத்தினர். மாலை 6 மணி அள வில் பள்ளியில் இருந்து புறப்பட்டு மகாமக குளம் வரை மவுன ஊர் வலம் சென்று இறந்த குழந்தை களின் நினைவாக மோட்சதீபம் ஏற்றினர்.
குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்திடுக!
ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு இந் திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள் அஞ் சலி வீரவணக்கம் செலுத்தினர். அப்போது இந்திய மாணவர் சங்க தஞ்சை மாவட்டச் செயலா ளர் அரவிந்த்சாமி கூறுகையில், ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் பள்ளி குழந்தைகள் இறந்த தினத்தை இந்திய மாணவர் சங்கம் கருப்பு தினமாக அனுசரித்து வரு கிறது. கும்பகோணத்தில் கல்வி வியாபாரத் தீயில் வெந்து மடிந்த 94 பச்சிளம் குழந்தைகளுக்கு ஜூலை 16-ம் தேதியை குழந்தைகள் பாது காப்பு தினமாக அறிவித்திட வேண் டும். ஜூலை 16 அன்று கும்பகோணத் தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது போன்று கும்பகோணத்தில் நடந்த துயரம் வேறு எங்கும் நடந்திடக் கூடாது. தனியார் பள்ளிகளின் கட் டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தி தனியார் பள்ளிகளின் கட்ட மைப்பு வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஜூலை 16 குழந்தைகள் பாது காப்பு தினமாக வரும் ஆண்டு முதல் அறிவிக்காவிட்டால், இந்திய மாண வர் சங்கம் மாணவர்களைத் திரட்டி பெற்றோர்களோடு பெருந்திரள் போராட்டம் நடத்தும். 2020-ல் மேற் கண்ட கோரிக்கைகளை நிறைவேற் றிட உடனே அறிவிக்க வேண்டும் என்றார். பின்பு இந்திய மாணவர் சங்கத்தி னர் பேரணியாக சென்று கும்ப கோணம் பாலக்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி னர். வீரவணக்க நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் வீரையன், மாவட்ட துணைத் தலைவர் பிரபா கரன், அருண்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிரில்.இமான், மாவட்ட குழு உறுப்பினர் ராஜாராம், விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பெற்றோர் கள் கலந்து கொண்டனர். (ந.நி)