tamilnadu

கல்லூரி மாணவியர் விடுதியில் ஆய்வு

 தஞ்சாவூர், அக்.15-  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குந்தவை நாச்சியார் கல்லூரியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்டடம் மற்றும் வளாகத்திற்குள் டெங்கு கொசு புழுக்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த அவர், விடுதி கட்டட அறை கள் மற்றும் வளாகத்தினை தூய்மையாக பராமரித்து தண்ணீர் தேங்காத வாறு பார்த்துக் கொள்ளும்படி விடுதி காப்பாளரை அறிவுறுத்தினார். மேலும், மாணவியர் விடுதியின் சமையற் கூடம், உணவுக் கூடம், மொட்டை மாடி, கழிவறை, சுற்றுப்புறம் ஆகியவற்றை சுகாதாரமாக வைத்து கொள்ளு மாறு அறிவுறுத்தினார். இவ்வாய்வின் போது, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளங்கோ, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ரவீந்திரன் மற்றும் அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.