tamilnadu

தஞ்சை மாவட்டத்தில் களம் காணும் சிபிஎம் வேட்பாளர்கள்

தஞ்சாவூர், டிச.22- ஊரக உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகின்றது. டிச 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்த லில் போட்டியிடும் சிபிஎம் வேட்பா ளர்கள் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றை எதிர்த்து, கொள்கை களை முன்வைத்து பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றனர்.  தற்போது கட்சியின் சார்பில் உள் ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள் விபரம் வருமாறு: மாவட்ட ஊராட்சிக்குழு பொறுப் பிற்கு வார்டு எண் 15ல் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் வார்டு எண் 11ல் பி.கலைச்செல்வி இருவரும் போட்டியிடுகின்றனர்.  ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், தஞ் சாவூர் ஒன்றியம் வார்டு எண் 22 நாஞ்சிக் கோட்டையில் பி.என்.பேர் நீதி ஆழ் வார், வார்டு எண் 23 விளார் பகுதியில் எஸ்.மதினா, பூதலூர் ஒன்றியம் வார்டு 13 வெண்டயம்பட்டி, மனையேறிப்பட்டி யில் எல். ராஜாங்கம், 9 ஆவது வார்டு பூதலூரில் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் என்.வி.கண்ணன், வார்டு எண் 14 புதுக்குடியில் கே.மருதமுத்து, வார்டு எண் 4 மைக்கேல்பட்டி, தீட்ச சமுத்தி ரம், ஆற்காடு பகுதியில் தி.பாலாம் பாள், வார்டு எண் 16 செங்கிப்பட்டி,  ஆச்சாம்பட்டியில்எஸ்.மலர் கொடி, திருவையாறு ஒன்றியம் 17 ஆவது வார்டு வரகூர், அம்மையகரம், கழுமங்கலம் பகுதியில் ஆர்.அனு சுயா, அம்மாபேட்டை ஒன்றியம் வார்டு-8 புலவர்நத்தம், நெல்லித் தோப்பு, குமளக்குடியில் என்.வெற்றிச் செல்வி, வார்டு எண் 13 ராராமுத்தி ரைக் கோட்டை, நல்லவன்னியன் குடி காட்டில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, பாபநாசம் ஒன்றி யம் வார்டு எண் 17 சூலமங்கலம், சர போஜிராஜபுரத்தில் வி.உமாபதி, வார்டு எண் 10 உமையாள்புரம், அண்டக்குடியில் ஜி. செல்வகுமார், கும்பகோணம் ஒன்றியம் வார்டு 11 அம்மாசத்திரத்தில் டி.வாசுதேவன், வார்டு எண் 5 கடிச்சம்பாடி, கொத்தங் குடி, வாளபுரம் பகுதியில் என்.வளர் மதி, திருவிடைமருதூர் ஒன்றியம் வார்டு எண் 19 செம்மங்குடி, பருத்திச்சேரி, கீர னூரில் பி.கண்ணகி, திருப்பனந்தாள் ஒன்றியம் வார்டு எண் 15 திருலோகி, மேலசூரியமலை, திருமாந்துறையில் சி.அம்சவள்ளி, ஒரத்தநாடு ஒன்றியம் வார்டு எண் 19 மண்டலக்கோட்டை, ஆயங்குடியில் ஜவஹர்லால் என்ற ரெங்கசாமி, திருவோணம் ஒன்றியம் வார்டு எண் 10 வெட்டுவாகோட்டை யில் இடைக் குழு செயலாளர் பி. கோவிந்தராசு, வார்டு எண் 11 நெய் வேலி வடக்கில் கே.ரவிச்சந்திரன், மதுக் கூர் ஒன்றியம் வார்டு-1 கருப்பூர், புல வஞ்சி, அண்டமியில் கோ.சுதாகர், பேராவூரணி ஒன்றியம் வார்டு எண் 2 பூவலூர், வாட்டாத்திக்கோட்டையில் ஆர்.மாணிக்கம் ஆகியோர் போட்டி யிடுகின்றனர். சிற்றூராட்சி தலைவர் தேர்தலில், தஞ்சை ஒன்றியம் மனக்கரம்பையில் டி.வசந்தி, மாத்தூரில் மலர்விழி, பூதலூர் ஒன்றியம் பாதிரக்குடியில் சம்சுதீன், விஷ்ணம்பேட்டையில் இளஞ்சியம், பூதலூரில் என்.வசந்தா, திருவையாறு ஒன்றியம் வரகூரில் எஸ். சுதா, மன்னர் சமுத்திரத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பழனி அய்யா, அம்மாபேட்டை ஒன்றியம் நெல்லி தோப்பில் பி.விஜயலெட்சுமி, எட வாக்குடியில் செல்வராஜ்,  ராராமுத்திரக்கோட்டையில் செந்தமிழ்ச்செல்வன், கும்பகோணம் ஒன்றியம் இன்னம்பூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், உத்தமதானியில் கே. நாகவள்ளி, நீலத்தநல்லூரில் கே. ராணி, பாபுராஜபுரத்தில் கலா, திரு விடைமருதூர் ஒன்றியம் மாங்குடியில் முருகேசன், கீரனூரில் ஜோதி, ஒரத்த நாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு தெற் கில் பார்வதி, ஒக்கநாடு கீழையூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்குமார், பூவத்தூரில் சி. மெய்க்கப்பன், திருவோணம் ஒன்றி யம் பாதரங்கோட்டை வடக்கில் மாவட் டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி, பட்டுக்கோட்டை ஒன்றியம்  கரம்பயத்தில் சைதாம்பாள்  செல்வம், தம்பிக்கோட்டை வடகாட்டில்  எஸ்.எஸ். சுப்பிரமணியன், மதுக்கூர் ஒன்றியம் வாட்டாக்குடி உக்கடையில் ரெத்தினம், ஒலயக்குன்னத்தில் இடைக் குழு செயலாளர் வை. சிதம்பரம், பேராவூரணி ஒன்றியம் அம்மையாண்டியில் பி.ஆத்மநாதன், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக் காட்டில் மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா ஆகியோர் போட்டி யிடுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், 2 பேர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கும், 21 பேர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பொறுப்பிற்கும், 26 பேர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கும் களம் காண் கின்றனர்.