தஞ்சாவூர், செப்.26- “மண் பாத்திரங்கள் பற்றிய தொல்லியல்” எனும் தலைப் பில் பன்னாட்டுப் பணிப்பட்டறை தமிழ்ப் பல்கலைக்கழ கத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை யினால் செப்டம்பர் 24, 25 26 ஆகிய 3 நாள்களில் நடத்தப் படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் பேரா சிரியர்களுக்கான மரபுசார் மற்றும் ஆய்வுத் திறன் மேம் பாட்டுப் பயிற்சி வரிசை என்ற திட்டத்தின் பகுதியாக இந்தப் பணிப்பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிப் பட்டறையில் முதல் நாளான செவ்வாய்க்கிழமை அன்று, ‘சிந்துவெளி நாகரிகம் முதல் வடகிழக்கு இந்தியா வரை யிலான’ இந்தியாவின் பல பகுதிகளில் உருவாக்கப்பட்ட தொல்லியல் பானை வகைகள் குறித்து விவாதிக்கப்பட் டது. இதன் தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். பரோடா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழக, புலத்தலைவர், பேராசிரியர் கே.கிருஷ்ணன், பானை வகைகளை ஆய்வது குறித்த முறைகளை மாணவர் களுக்கு பயிற்றுவித்தார். அமெரிக்காவின் வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் ஹௌசெர், “சோழ மண்டலக் கடற்கரை யின் காலனியாதிக்க காலப் பானை வகைகள்” குறித்து சொற்பொழிவாற்றுகையில்,” மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இது போன்ற பணிப் பட்டறைகள் அவசியம்” என்றார். சுவடிப்புலம், தலைவர் பேராசிரியர் பா.ஜெயக்குமார், முனைவர் வீ.செல்வகுமார், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, தலைவர், முனைவர் செ. கௌரிசங்கர், முனைவர் அ.சங்கர் ஆகியோர் பங்கேற்ற னர்.