tamilnadu

img

சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆத்தாளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்கம், பேரூராட்சி, பொது சுகாதாரத்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் கே.ஆர். கிருஷ்ணன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கே.ஜெயாஞ்சலி வரவேற்றார்.  தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மாணவர்கள் சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் எஸ்.சந்திரசேகரன், ஆசிரியை ஆர்.பூங்கோதை, துப்புரவு ஆய்வாளர் ஏ.ராம்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் அபிராமி ஆர்.சுப்பிரமணியன், என்.பி.நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ரோட்டரி பொருளாளர் ஜெ.மணிகண்டன் நன்றி கூறினார்.