tamilnadu

வன்னியம்பட்டி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிடுக! நாளை போராட்டம் : சிபிஎம் அறிவிப்பு

தஞ்சாவூர், ஆக.17-- ஆக.19 (புதன்கிழமை) பூதலூர் அருகே வன்னியம்பட்டி, பஞ்சணூரணி ஏரியில் ஆக்கி ரமிப்பு அகற்றும் போராட்டம் நடைபெறும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் மற்றும்  செங்கிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டம் ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்  என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டங்களில், “ஆக.20 முதல் 26  வரை தஞ்சை மாவட்டத்தில், மத்திய, மாநில  அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கை களைக் கண்டித்து நடைபெறும், மக்கள் சந்திப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்து வது, பூதலூர் ஒன்றியம் வன்னியம்பட்டி பஞ்ச ணூரணி ஏரியில், தனிநபர்களால் செய்ய ப்பட்டுள்ள, ஆக்கிரமிப்பை ஆக.19 (புதன்கி ழமை) நேரடியாக களத்தில் இறங்கி அகற்றும்  போராட்டம் நடத்துவது” என முடிவு செய்ய ப்பட்டது.

;