தஞ்சாவூர், மே 16-விவசாயிகள் ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால் மண்ணின் கார அமில தன்மைகள் மாறுகின்றன. மேலும் நிலத்தில் உப்பின் அளவு அதிகரிக்கிறது. தொடர்ந்து சாகுபடி செய்தல் மற்றும் ரசாயன உரங்களைதொடர்ந்து பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மாறிஅங்கக சத்துகள் குறைந்து மண் வளமற்றதாகி விடுகிறது. ஆகையால் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் விடும் முன்னர் தக்கைப்பூண்டு பயிரிட வேண்டும். இதற்காக ஏக்கருக்கு 20 கிலோ விதைகளை விதைக்கவேண்டும். தக்கைப்பூண்டு களிமண் பகுதிக்கு ஏற்றது.மணல் பகுதிகளுக்கு சணப்பு ஏற்றது. 35 முதல் 40 நாள்களில் பூக்கும் தருணத்தில் இதனை மடக்கி உழுதுமண்ணிற்கு அடி உரமாக மாற்றி விடவேண்டும். அதன்பின்எந்த பயிரை சாகுபடி செய்தாலும் மண் வளம் பெற்று விவசாயம் செழிக்க ஆரம்பிக்கும். ஏக்கருக்கு சுமார் 20-25 டன்வரை தழைகள் கிடைக்கிறது. பசுந்தாள் பயிரான தக்கைப்பூண்டு மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் பண்புடையதால் ஆண்டுக்கு ஓருமுறை இப்பயிரை சாகுபடி செய்ய வேண்டும். இதனால் அடுத்த பயிருக்கான உரத்தேவை 40-60 சதவீதம் வரை குறைகிறது. மண்ணின் இயற்பியல் மற்றும்வேதியியல் தன்மைகளை உயர்த்துகிறது. காரத்தன்மை உடைய நிலத்தை நடுநிலைப்படுத்த பயன்படுகிறது. மண்ணில் பொதுப்புதன்மை மற்றும் காற்றோட்டத்தை அதிகப்படுத்துவோடு மண் அரிப்பை தடுக்கிறது. எனவேவிவசாயிகள் நடவு பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் முன் நடவு வயலில் தக்கைப்பூண்டு பயிரிட்டு மடக்கி உழுதபின் ஒற்றை நெல் சாகுபடி முறைகளை கையாண்டு கூடுதல் மகசூல் பெற வேண்டும் என மதுக்கூர் வட்டாரவேளாண் உதவி இயக்குநர் திலகவதி தெரிவித்துள்ளார்.