கும்பகோணம், ஜூன் 15- தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருவிடை மருதூரில் ஒன்றிய திருவிழா கடை வியாபாரிகள் சங்க (சிஐடியு) பேரவை கூட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா. ஜீவபாரதி, ஜி.பக்கிரிசாமி, கும்பகோ ணம் கிளை தலைவர் கிருஷ்ண மூர்த்தி செயலாளர் கண்ணன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். சங்கத் தலைவராக வி.குமார், செயலாள ராக எஸ் முருகன், துணை செயலாள ராக வெங்கடேசன், முத்து கிருஷ்ணன் பொருளாளராக சாந்தி நிர்வாகிகளாக லட்சுமி உமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் ஊரடங்கால் திரு விழாக் கடை வியாபாரிகள் வருமா னம் இன்றி இருப்பதால் கொரோனா கால நிவாரணமாக மாதம் 15 ஆயிரம் ரூபாயும், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி திரு விழாக் கடை வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் 50 ஆயிரம் தனிநபர் கடன் வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருவிழா கடை வியாபாரிகள் திருபுவனம் மத்திய கூட்டுறவு வங்கியில் அரசு அறிவித்த ரூ.50 ஆயிரம் தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்தனர்.