தஞ்சாவூர், மார்ச் 7- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதியில், பணத்தைக் கட்டி விட்டு, தட்கல் மின் இணைப்பிற்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயி கள் காத்திருக்கின்றனர். தமிழக அரசின் சார்பில், விவசா யத்திற்கென இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணைப்புக் காக விவசாயிகள் 20 ஆண்டுகளாக காத்திருக்கும் சூழல் உள்ளது. இதனால் தட்கல் முறையில் பணம் செலுத்துவோருக்கு, 6 மாத காலத்தில் இணைப்பு வழங்கப்படும் என புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டம் 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை நடை முறைப் படுத்தினால், இலவச மின்சாரம் நிறுத்தப்படுமா எனவும், அப்போது விவசாயிகள் தரப்பில் சந்தேகம் எழுந்தது. தட்கல் திட்டத்தில் இணைப்பு பெற, 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டாருக்கு ரூ 2 லட்சத்து 50 ஆயிரம், 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டாருக்கு ரூ 2 லட்சத்து 75 ஆயிரம், 10 குதிரைத் திறன் கொண்ட மோட்டாருக்கு ரூ 3 லட்சம், 15குதிரைத்திறன் கொண்ட மோட்டாருக்கு ரூ 4 லட்சம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்தது. இதையடுத்து, 6 மாதத்தில் இணைப்பு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பல லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, நீண்ட நாட்களாக காத்துக் கிடக்கின்றனர். ஆனால் இதுவரை பலருக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. அரசுத் தரப்பிலோ ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கின்ற னர். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் புறநகர் வாடியக்காடு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட விக்கிரமம் கிராமத்தைச் சேர்ந்த 134 விவசாயி கள் தட்கல் இணைப்பிற்காக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால், இன்று வரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் முத்துவேல், கண்ணையன், சந்திரன் ஆகியோர் கூறியதாவது, “ தட்கல் இணைப்பில் முன்னுரிமை அடிப்படையில் இல்லாமல், ஆளுங்கட்சி பரிந்துரை அடிப்படையில் சிலருக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. பட்டி யலில் தகுதி உடையோருக்கு இது வரை வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கில் கடன் வாங்கி, மின் வாரியத்தில் செலுத்திய பணத்துக்கு வட்டி கட்டி அழியும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். கஜா புயலை மின்வாரிய அதிகாரிகள் காரணம் காட்டினர். தற்போது 16 மாதங்கள் கடந்த நிலையில், போதிய மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இல்லை. ஊழி யர்கள் இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கின்றனர். ஆற்று, ஏரிப்பாசனம் இல்லாத போது கை கொடுக்கும் என்று தான் கடைமடைப் பகுதி விவசாயிகள், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கி னர். ஆழ்துளைக் கிணறு, மோட்டார், மோட்டார் ரூம் என கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம், தட்கல் டெபாசிட் பணம் ரூ. 3 லட்சம் என, பெருந்தொகைக்கு வட்டி கட்ட முடியாமல், கடனாளி யாக சொல்ல முடியாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளோம். மின்வாரியம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.