தஞ்சாவூர், செப்.8- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் நெய்வாசல் பஞ்சாயத் துக்குட்பட்ட அரசப்பட்டு கிரா மத்தில் ஊசிக்கண் பாலம் உள்ளது. இந்தப் பாலம் வடவாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. வட வாற்றின் ஒருபகுதி மன்னார்குடி தாலுகா பேரையூர் வழியாகவும், மற்றொரு பகுதி வடுவூர் ஏரிக்கும் சென்று கலக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வட வாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரை மட்டப்பாலம் தற்போது வலு விழந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. மேலும் ஆற்றில் தண் ணீர் வரும் காலங்களில் பொதுமக் கள் இதன் வழியாக பயணிக்க முடி யாமல் சில கி.மீ தூரம் சுற்றிச் செல் லும் நிலை உள்ளது. இந்நிலையில், குறுகலான இந்தப் பாலத்தை இடித்து விட்டு, புதிய உயர்மட்டப் பாலம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை எழுந் தது. இதையடுத்து, பழைய பாலத்தை உடைத்து விட்டு, நபார்டு மூலம் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டது. மாற்றுப் பாலமோ, நடை பாலமோ அமைக்காமல் இந்த பாலம் சீர மைக்கும் பணி நடைபெற்று வந் தது. பொதுமக்கள், அம்மாபேட்டை, அருந்தவபுரம் செல்லவோ, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள், பொது மக்கள் இந்த பாலத்தின் வழி யாகவே சென்று வந்தனர். ஆனால் மாற்று வழி ஏற்பாடு இல்லாததால் ஆற்றைக் கடந்து செல்ல முடியா மல் பலரும் அவதிப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில், மாற்று நடை பாலம் உடனடியாக அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார் தலைமையில் கடந்த செப்.3 ஆம் தேதி சாலை மறி யல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் கடந்த 2 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பாலத்தை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தை செப். 7 ஆம் தேதி நடைபெறும் என்று கூறியதின் பேரில் 3 ஆம் தேதி நடை பெற இருந்த சாலை மறியல் கை விடப்பட்டது. இந்நிலையில் இது குறித்த பேச்சுவார்த்தை சனிக்கிழமை ஒரத்தநாடு வட்டாட்சியர் தலைமை யில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செய லாளர் என்.சுரேஷ்குமார், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் ராஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அய்யப்பன் மற்றும் ஊர் பொதுமக் கள் கலந்து கொண்டனர். அதில், சம்பந்தப்பட்ட பாலத்தை நபார்ட் கிராம சாலை திட்டத்தின் மேற்பார்வை பொறியா ளர் நேரில் பார்வையிட்ட பிறகு, தற்காலிக நடைபாலம் அமைக்கும் பணி குறித்து பரிசீலிக்கப்படும் என எழுத்து பூர்வமான உத்தரவாதம் வழங்கப்பட்டது.