tamilnadu

img

சேதுபாவாசத்திரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம்

தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் பகுதி மீனவர்கள் கடந்த  இரண்டு நாட்களாக கடலுக்கு மீன்பி டிக்கச் செல்லவில்லை. வெளிமா வட்ட மீன் வியாபாரிகளுக்கு ஆதர வாக, மீன்வளத்துறை அதிகாரிகள் செயல்படுவதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டி னம், சேதுபாவாசத்திரம் ஆகிய இட ங்களில் விசைப் படகுகளுக்கான மீன்பிடித் துறைமுகம் உள்ளது. மீனவர்கள் தங்களுக்குள் செய்து கொ ண்டுள்ள ஒப்பந்தப்படி, திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய மூன்று  நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கட லுக்கு மீன் பிடிக்கச் செல்வதுண்டு. மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வர்.  இரட்டை மடி வலை, சுருக்குமடி வலை, சலங்கை வலை போன்ற குறி ப்பிட்ட சில ரக வலைகளை பயன்ப டுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதி த்துள்ளது. அதை மீறி தடை செய்ய ப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அவ்வப்போது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மற்ற வலை களைப் பயன்படுத்தி அதிக அளவு  மீன் பிடித்து கரைக்கு வரும் விசை ப்படகு மீனவர்கள் மீதும் மீன்வளத் துறையினரால் வழக்கு பதிவு செய்ய ப்படுகிறது. இது மீனவர்கள் மத்தியில்  கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் ஏ.தாஜுதீன் கூறியதாவது:  “மீன் மடி, இறால் மடி என இருவ கையான வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகிறோம். இறால் மடி வலை சிறியதாகவும், மீன்பிடி வலை  சற்று பெரியதாகவும் இருக்கும். மீன் மடி வலையை பயன்படுத்தி மீன்  பிடி தொழில் செய்தால் அதிக அள வில் மீன்கள் மற்றும் சங்காயம் எனப்ப டும் கோழித் தீவனம் தயாரிக்கப் பய ன்படும், சிறிய ரக கழிவு மீன்களும் பிடி படுகின்றன.  இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்குள் சென்று  சோதனை நடத்தாமல், கரையில் இரு ந்தபடி, அதிக அளவு மீன்களைப் பிடி த்து வரும் மீனவர்களை அச்சுறுத்தும்  விதமாகப் பேசுகின்றனர். மேலும்,  மீன்பிடி வலையை பயன்படுத்துவ தற்கும் அதிகாரிகள் தடை விதிக்கி ன்றனர்.  தடை செய்யப்பட்ட வலைக ளைப் பயன்படுத்தும் மீனவர்களை கடலுக்குள் சென்று ஆய்வு செய்து,  நடவடிக்கை எடுப்பதை வரவேற்கி றோம். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் கரையில் அதிக மீன்களுடன் வரும் மீனவ ர்களை தடை செய்யப்பட்ட வலை களை பயன்படுத்துவதாக கூறி நெரு க்கடி தருகின்றனர்.  கடலூர் மாவட்டத்திலிருந்து வரும் குறிப்பிட்ட சில மீன் வியா பாரிகள் மத்தி மீன் வேண்டுமெனக் கேட்டு, விசைப்படகு மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தச் சொல்லி நெருக்கடி தருகின்றனர். ஆனால் விசைப்படகு மீனவர்கள் இதனை ஏற்க மறுத்து வருகிறோம். இதனால் சக்தி மிகுந்த வெளிமாவட்ட மீன் வியாபாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, விசைப்படகு மீனவர்க ளுக்கு நெருக்கடி தருகின்றனர்.  இதனால், மீன்வளத்துறை அதி காரிகள் விசைப்படகு மீனவர்க ளுக்கு கடலுக்குள் செல்ல அனுமதி டோக்கன் வழங்காமலும், வழக்கு போடுவோம் எனவும் அச்சுறுத்தி வரு கின்றனர். இது முற்றிலும் மனித உரிமை மீறலாகும். அதிகாரிகளின் அச்சுறுத்தும் போக்கு கைவிடப்பட வேண்டும். மீனவர்களை வஞ்சி க்கும் அதிகாரிகளின் செயலை கண்டி த்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.  “இரட்டை மடி வலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீன் மடி வலையையும் பயன்படுத்த க்கூடாது என அதிகாரிகள் மிரட்டு கின்றனர். மீறினால் வழக்குப்பதிவு செய்வதாக அச்சுறுத்துகின்றனர். இறால் மடி வலையில் இறாலும் போதிய அளவு கிடைப்பதில்லை. மீனும் கிடைப்பதில்லை. வருவா யும் குறைவுதான். அதனால் பிரச்ச னைகளுக்கு தீர்வு காணும் வகை யில் கடலுக்கு செல்வதில்லை என  முடிவு செய்துள்ளோம்” என்கின்ற னர் மீனவர்கள்.  இதன் காரணமாக மூன்று தினங்க ளாக 52-க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் கடலுக்கு செல்லாமல் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.