தஞ்சாவூர், பிப்.12- தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இடதுசாரிக் கட்சி களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் என்.பாலசுப்ர மணியன், மாநகரச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், மக்கள் அதிகாரம் மாநில பொரு ளாளர் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடு தலை மாவட்டச் செயலாளர் இரா. அரு ணாச்சலம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியா மட்டுமல்லாது, உலக நாடு கள் அனைத்தும் தீராத பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீள முடியாது தத்தளிக்கின்றன. இதற்கு அடிப்படையான காரணம், நவீன தாராளமயம் என்ற பெய ரில் இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுச் சொத்துக்களையும் தனியார் மயமாக்கும் போக்கே முக்கிய காரணம் ஆகும். அத்துடன் மக்கள் நலத் திட்டங்களான கல்வி, மருத்துவம், குடிநீர் போன்றவற்றை அரசுகள் கைவிடுவதும், அவற்றை தனி யார் கொள்ளைக்கு திறந்துவிடும் போக்கா கும். இதன் விளைவாக சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து, ஆகப் பெரும்பான்மையான மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இதற்கு அடிப்படை காரணம் முதலா ளித்துவ முறைதான். உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின், பெரும் துன்பங்களுக்கும், அவலங்களுக்கும் ஒரே மாற்று பொதுவுடமை சமூக அமைப்பு தான். இதை வலியுறுத்தும் மார்க்சிய தத்துவ நூலான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளி யிடப்பட்ட பிப்.21 அன்று உலகம் முழுவதும் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சையில் அனைத்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கம், கருத்த ரங்கம் பிப்.21 அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.