tamilnadu

img

கண் பரிசோதனை முகாம்

 தஞ்சாவூர்: பேராவூரணி லயன்ஸ் சங்கம், ஸ்ரீ விநாயகா ஜூவல்லர்ஸ், ஸ்ரீ விநாயகா திருமண மஹால்,  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம், பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் கே.குட்டியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, தொழிலதிபர் இ.வீ.சந்திர மோகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க பொருளாளர் ஏ.ஜெயச்சந்திரன், கே.பி.நல்லசாமி, டாக்டர் து.நீலகண்டன், ஏஷியன் ஹெச்.சம்சுதீன், வி.எம்.தமிழ்செல்வன், கே.கே.சுப்பிரமணியன், வைரவன், தலைமையாசிரியர் மனோகரன், குமரப்பா பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர் பிச்சை, வர்த்தக சங்க தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, வருவாய் ஆய்வாளர் சுப்பிர மணியன், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன், அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக லயன்ஸ் சங்க நிர்வாகி என். சரவணன் நன்றி கூறினார். முகாமில் 633 பேர் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாகவும், கண் கண்ணாடி சலுகை விலையிலும் வழங்கப்பட்டது. இவர்களில் கண் பார்வை குறைபாடு உடைய 84 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர்.