tamilnadu

img

பாசன வாய்க்காலில் தண்ணீர் விடாததால் விதை நெல்லை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 12- திருவையாறு அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் விடாத கார ணத்தால், நாற்றங்கால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதை பார்த்து வேதனையடைந்த விவசாயி கள், சனிக்கிழமை தஞ்சாவூர் பொ துப்பணித்துறை கண்காணிப்பு பொறி யாளர் அலுவலகத்தில் விதை நெல்லை  கொட்டி  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவையாறு அருகே கண்டியூர்,  காட்டுக்கோட்டை, நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உள்ளிட்ட 15 கிரா மங்களில் குடமுருட்டி ஆற்றிலிருந்து  திருவலாம்பொழில் வாய்க்கால், சங்கராகுளம் வாய்க்கால், திரு த்துக்கல் வாய்க்கால், கண்டியூர் வாய்க்கால் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் குறுவை சாகு படிக்காக கல்லணையிலிருந்து ஜூன்  16 ஆம் தேதி தண்ணீர் திறந்துவி டப்பட்டது. இதையடுத்து கண்டியூர் பகுதி விவசாயிகளும் குறுவை சாகுபடி பணியை தொடங்கினர். இத ற்காக பம்புசெட் மூலம் சுமார் 2 ஆயி ரம் ஏக்கரில் நடவு செய்ய 100 ஏக்கரில் நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு விதைகளை தெளித்தனர். ஆனால் வாய்க்கால்களில் தண்ணீர் வராத தால் இளம் நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் அருகில் உள்ள அடி பம்புகளிலிருந்து குடம், வாளிக ளில் தண்ணீர் பிடித்து வந்து நாற்றங்காலில் ஊற்றி வந்தனர்.

 இதுகுறித்து சில நாளிதழ்களில் வெள்ளிக்கிழமை செய்தி வெளி யானது. இதற்கிடையில்  பொதுப்ப ணித்துறை மூலம், “கண்டியூர் பாசன வாய்க்கால் நாற்றங்கால் மேடான பகுதி மற்றும் சம்பா சாகுபடி பகுதி”  என குறிப்பிட்டு பத்திரிகை செய்தி வெளியானது. இதனால் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சனிக்கிழமை தஞ்சாவூர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு விதை நெல் மூட்டைகளுடன் வந்த னர். அப்போது, ‘கண்டியூர் வாய்க்கால் மூலம் காலம் காலமாக  குறுவை சாகுபடி செய்து வருகி றோம். வருவாய்த்துறையின் ஆவண ங்களிலும் குறுவை சாகுபடி செய்து அதற்கான ரசீதுகளை பெற்றுள்ள  நிலையில், பொதுப்பணித்துறையி னர் எப்படி சம்பா சாகுபடி செய்யப்ப டும் பகுதி என தவறாக கூறினர்.  அதே நேரத்தில் கண்டியூர் பகுதி யில் குடமுருட்டி ஆற்றில் 2800 கன  அடி தண்ணீர் விட்டால்தான் அனைத்து வாய்க்கால்களுக்கும் தண்ணீர் சென்று பாசனம் செய்ய முடி யும், ஆனால் குடமுருட்டி ஆற்றில் 1000 கன அடி மட்டுமே தண்ணீர் செல்வதால், வாய்க்கால்களுக்கு தண்ணீர் ஏறிப் பாயவில்லை.

இதனால் குறுவை சாகுபடியை இது வரை செய்ய முடியவில்லை. நாங்கள்  விதை நெல்லை வாங்கி வைத்து ள்ளோம். ஆனால் இதுவரை வாய்க்கால்களுக்கு தண்ணீர் விட வில்லை.  பொதுப்பணித்துறையினர் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது’ என கூறி விதை நெல்லை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் வாச லில் கொட்டியும், விதை நெல்லை அள்ளி தூற்றி “விவசாயிகளை வஞ்சிக்கும் அதிகாரிகள் நல்லாவே இருக்க மாட்டீர்கள்” என தூற்றினர். பின்னர் விவசாயிகளிடம் காவ ல்துறையினரும், பொதுப்பணி த்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.அன்பரசன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கை விட்டு தங்களுடைய கோரிக்கை களை மனுவாக வழங்கினர்.