தஞ்சாவூர் ஆக.31- தமிழ்ப் பல்கலைக்கழக மெய்யியல் துறை சார்பில் இந்திய தத்துவ ஆய்வுக் கழக நிதி நல்கையில் சுவாமி இராமலிங்கரின் தத்துவம் என்ற பொருண்மையில் மண்டலக் கருத்தரங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மெய்யியல் துறைத் தலைவர் பி.பாலச்சந்திரன் வரவேற்றார். மொழிப்புல முதன்மையர் இரா.காமராசு வாழ்த்திப் பேசினார். தஞ்சாவூர் அருட்பெரும் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பா.தம்பையா தொடக்க உரை யாற்றினார். குடவாசல் புலவர் வீ.இராமமூர்த்தி, தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் செக.மகேசன், திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரிப் பேராசிரியர் பி.வெங்கடேசன், அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத்துறை இணைப் பேராசிரியர்(ஓய்வு) சி.பாலு உரையாற்றினர். உதவிப் பேராசிரியர் தி.பார்த்திபன் நன்றி கூறினார்.