tamilnadu

img

தஞ்சாவூரில் சிபிஎம் வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் (வார்டு எண்-15 ல்) போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.செந்தில்குமார் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சாவூர் மாதாக்கோட்டை, காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து, அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரினார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் இரா.புண்ணிய மூர்த்தி, என்.சிவகுரு, சரவணன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, நகரக்குழு ராஜன், வசந்தி, வடிவேலன் மற்றும் சாமிநாதன், கே.எஸ்.கே ஆகியோர் உடனிருந்தனர்.