தஞ்சாவூர், மார்ச் 24- தஞ்சாவூர் குழந்தை இயேசு கோயில் அருகே தற்காலிக காம ராஜர் காய்கறி சந்தை இயங்கி வரு கிறது. இங்கு கடைகள் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படுவது வழக்கம். தற்சமயம் கொரோனா தடுப்பு நடவ டிக்கை காரணமாக அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் காய்கறி சந்தைகள், செவ்வாய்க் கிழமை முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என மாநகர காமராஜர் சந்தை தலைமை காய்கனி வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக இங்கு வந்த பொது மக்கள் அனைவரும் கிருமி நாசினி கலக்கப்பட்ட தண்ணீரில் கை கழுவிய பின்னரே சந்தைக்குள் அனு மதிக்கப்படுவதாக தெரிவித்தனர். சலூன் கடைகள் மூடல்: சலூன் கடைகளை ஒரு வார காலம் மூட, பேராவூரணி வட்டார மருத்துவர் சங்கம் முடிவு செய்துள்ளது. இச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தி ற்கு பின்னர், ஒருங்கிணைப்பாளர் செ.மதிவாணன், தலைவர் கே.என். ராஜா, செயலாளர் எஸ்.கதிரேசன் தெரிவித்ததாவது, மார்ச் 24 முதல் 31 வரை, சலூன் கடைகளை அடைத்து விடுமுறை விடப்படும்” என்றனர். இதனால் பேராவூரணி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சலூன் கடைகள் மூடப்படுகின்றன. அதிராம்பட்டினம்: அதிராம் பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு தலைமையில் துப்புரவு களப் பணி யாளர்கள், குடியிருப்புகள், வர்த்த கப் பகுதிகளில் குப்பைகள் அகற்று தல், பிளிச்சிங் பவுடர் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீர் வடிகால் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பொது சுகாதாரப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளிட்டவை களில் குளோரினேஷன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் பேராவூரணி நகர் முழுவதும் நடைபெற்று வரும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணி மொழியன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.