தஞ்சாவூர், ஆக.1- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை நகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரிக்காடு கிளையின் செயலாளராக செயல் பட்டு வந்த நைனாமுகமது (57) திடீர் மாரடைப்பால் சனிக்கிழமை காலமானார். தோழர் நைனாமுகமது பட்டுக் கோட்டையில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது தாயார், மகபூப் மர்யம் (82) வயது முதிர்வின் காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். இதற்காக தனது சொந்த ஊரான, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சென்றிருந்த நிலையில், தாயார் இறந்த மறு தினம் திடீர் மாரடைப்பு கார ணமாக உயிரிழந்தார். மறைந்த தோழருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போராட்டங்கள் உள்ளிட்ட கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்க ளில் பங்கேற்றுள்ளார். காஷ்மீ ருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது, பட்டுக்கோட்டையில் நடந்த கருத்தரங்கில், இஸ்லாமிய ஜமா அத்தினரை பெருமளவில் திரட்டி னார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதி நிகழ்ச்சி கள் சனிக்கிழமை மாலை நடை பெற்றது. தோழரின் மறைவிற்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.