தஞ்சாவூர், பிப்.19- தஞ்சாவூரில் சிஐடியு உழைக்கும் பெண்கள், மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடை பெற்றது. சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், சிஐடியு திருவாரூர் மாவட்டச் செயலாளர் சி.முருகை யன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரைச்சாமி ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், “சிஐடியு அகில இந்திய மாநாட்டு அறைகூவலுக்கு இணங்க, மார்ச் 6 (வெள்ளிக்கிழமை) அன்று சிஐடியு உழைக்கும் பெண்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் இரா.மாலதி, கே.கல்யாணி, மாரிக் கண்ணு உள்ளிட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக் கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.