tamilnadu

img

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தற்காலிக பணிநீக்கம்

சிதம்பரம், செப். 14- சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்ட பத்தில் மரபுகளை மீறி ஆடம்பரமாக திருமணம் நடைபெற்ற விவகாரத்தில், பட்டு தீட்சிதர் என்பவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். செப்டம்பர் 11 அன்று கோயில் மரபுகளை மீறி ஆயி ரங்கால் மண்டபத்தில் சிவகாசியை சேர்ந்த ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலை அதிபர் ராஜரத்தினம் -பத்மா தம்பதியர் மகளான சிவகாமி மற்றும் சென்னை தொழில் அதிபர் மகன் சித்தார்த்தன் ஆகியோரின் திருமணம் மிகவும் ஆடம்பரத்துடன் நடைபெற்றுள்ளது. பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்காரங்கள் போல ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மற்றும் உள்பகுதி ஆகியவை அலங்காரம் செய்யப்பட்டு, திருமணத்திற்கு வரு பவர்கள் அமரும் வகையில் குஷன் நாற்காலிகளும் போடப் பட்டிருந்தன.

திருமணம் முடிந்த பிறகு தடபுடலான விருந்தும் நடை பெற்றுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள், திருமண நிகழ்ச்சிக்கு தீட்சிதர்கள் எவ்வாறு அனுமதி கொடுத்தனர் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கோவிலின் பூஜை ஸ்தானிகரும், டிரஸ்டியுமான பட்டு தீட்சிதர், மணப்பெண் சிவகாமிக்கு அங்கு திருமணம் நடக்க வேண்டும் என்பது நடராஜரின் அருள், இதைத்தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை என்று முடித்துக்கொண்டார். இந்நிலையில் பொது தீட்சி தர்கள் கூட்டத்தில், விதிகளை மீறிய பட்டு தீட்சிதர் தற்காலிக பணிநீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

;