tamilnadu

img

தஞ்சை அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு நூற்றாண்டு விழா

தஞ்சாவூர், டிச.11- தஞ்சாவூர் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, கண் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள், தற்போதைய பணியாளர்களுக்கு பாராட்டு விழாவும், கண் தொடர்பான கண்காட்சியும் நடை பெற்றது.  நூற்றாண்டு விழாவையொட்டி, இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இந்த ஆண்டு முழுவதும் கண் நோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு, கண் தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அதனொரு பகுதியாக மருத்துவமனை யில் பணியாற்றிய கண் மருத்துவர்கள், மருத்துவ செவி லியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரை ஒருங்கி ணைத்து பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த பாராட்டு விழாவிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இவ்விழாவில் “விழிக்கோலங்கள்” என்ற தலைப்பிலான கண் கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கண் சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் ஞானச்செல்வன், இணைப் பேரா சிரியர்கள் ராஜா, அமுத வடிவு மற்றும் மருத்துவ மாணவர்கள் செய்திருந்தனர்.