தஞ்சாவூர், செப்.19- தஞ்சாவூர் ரயிலடியில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப் பட்ட வேளாண்மை மண்டலமாக அறி விக்க வேண்டும். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண் டும். ஜனநாயக முறையில் உரிமைக் காகப் போராடும் பொதுமக்கள் மீது பொய் வழக்குகளைப் போடக் கூடாது. ஆம்பலாப்பட்டு, சூரக்கோட்டை, அம்மாபேட்டை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி யவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்தக் கோரி தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு களைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோலிய குழாய் பதிக்கும் பகுதி களில் மக்களை அழைத்து பேச வேண்டும். பொதுமக்களை அச்சுறுத் தும் போக்கைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி யும், சூரக்கோட்டையில் பெட்ரோலிய குழாய் பதிப்பதைக் கண்டித்து போராடி யவர்கள் மீது கோட்டாட்சியர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித் தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாவட்டத் தலைவர் வீர.மோகன், செயலர் பா.பாலசுந்தரம், தமிழர் தேசிய முன்னணி அய்யனாபுரம் சி.முருகேசன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கத் தலை வர் கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பா ளர் சு.பழனிராசன், தமிழக விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் ப.ஜெக தீசன், சிபிஎம்எல் மாவட்டச் செயலர் இரா.அருணாசலம், ஏஐடியுடிசி மாவட்டச் செயலர் ஆர்.தில்லைவனம், துணைச் செயலர் துரை.மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநக ரச் செயலர் என்.குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.