தஞ்சாவூர், டிச.12- மழையால் சேதமடைந்த நிலை யில் குண்டுங்குழியுமாக காணப்படும் பேராவூரணி முதன்மைச் சாலை யை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூர ணியில் உள்ள முதன்மைச் சாலை நீலகண்டப்பிள்ளையார் ஆலயம் தொடங்கி அண்ணாசிலை வரை சுமார் 1கி.மீ தூரம் உடையது. இந்த சாலை பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையாக வும் உள்ளது. இந்தச் சாலையில் தான் முக்கிய வர்த்தக நிறுவனங்கள், வங்கி கள், பேருந்து நிலையம், வாரச்சந்தை ஆகியவை உள்ளது. இந்த சாலை பிரதான சாலையாக விளங்குகிறது. பேராவூரணிக்கு வரும் வாகனங்கள் இந்தச் சாலையை கடக்காமல் எந்த பகுதிக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. அப்படிப்பட்ட இந்த சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிலையில் கடந்த 15 தினங்க ளாக பெய்த மழையில் முதன்மைச் சாலை மிகவும் சேதமடைந்தது. சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத் துகள் ஏற்பட்டு வந்தது. மேலும், இரவு நேரங்களில் சாலை பள்ளம் தெரியா மலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிர மப்பட்டு வாகனத்தை ஓட்டிச் சென்ற னர்.
மெத்தனப்போக்கு
கடந்த ஐந்து தினங்களுக்கு மேல் பேராவூரணி பகுதியில் மழை இல்லை. இந்த நேரத்தைப் பயன் படுத்திக் கொண்டு நெடுஞ்சாலைத் துறையினர் இந்த சாலையை விரை வில் சரி செய்திருக்கலாம். ஆனால் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரி வித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை, சாலைக்கு அருகே கப்பி கற்களையும் தார் கலந்த ஜல்லி களையும் கொட்டி வைத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவையெல்லாம் பேரா வூரணி அரசு மருத்துவமனையில் இருந்து பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் வரை உள்ள தார் சாலையில் உள்ள பள்ளதையும், படுகுழியையும் சரிசெய்ய போதாது. நெடுஞ்சாலைத்துறை இந்த வேலையை இன்னும் செய்ய வில்லை, கொட்டி வைத்த கப்பிக்கற்க ளையும் தார் ஜல்லிகளையும் கொண்டு ஒரு சில பள்ளங்களை மட்டும் சரி செய்துள்ளனர், பள்ளமும் படுகுழியும் பேராவூரணி அரசு மருத்துவ மனையில் இருந்து தொடங்கி பொ துப்பணித்துறை அலுவலகம் அரு கிலும், பேராவூரணி ரயில்வே நிலை யம் அருகிலும், பேராவூரணி ஸ்டேட் பாங்க் அருகிலும், பேராவூரணி பேருந்து நிலையம் செல்லும் அரு கிலும், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் செல்லும் அரு கிலும் தார்ச்சாலை மிகவும் பள்ள மும் படுகுழியாகவும் காணப்படு கின்றன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பி னர் வீ.கருப்பையா கூறுகையில், “நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவாக இந்த சாலையை சரி செய்து தர வேண்டும். பத்து தினங்க ளுக்கு மேலாக குண்டுங்குழியுமாக உள்ள சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.