தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசுக் கல்லூரியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். ஊமத்தநாடு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் விஜயராம் உரை நிகழ்த்தினார். பேராசிரியர்கள் சி.ராணி, நா.பழனிவேலு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.