தஞ்சாவூர் அக்.25- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூர ணியை அடுத்த செருவாவிடுதியில் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது மருத்துவம், சித்த மருத்துவப் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சை, குழந்தைகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. தனியார் கார்ப்பரேட் மருத்துவமனையைப் போல், சுத்தம், சுகாதாரத்துடன் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் வண்ண வண்ண கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலை மையில், டாக்டர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வரு கின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஐஎஸ்ஓ உலகத் தரச்சான்றிதழ் இம்மருத்துவமனைக்கு வழங்கப் பட்டது. மூலிகைத் தோட்டம், இயற்கை முறையில் நச்சுக் கலப்பில்லாத காய்கறிகளை நோயாளிகளுக்கு வழங்குதல், நாட்டுக்கோழி, சுகா தார நிலைய வளாகத்தில் பசுமாடு வளர்த்து, சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடிச் சென்று பால், முட்டை, வெல்லம், இயற்கை காய்கறிகள் வழங்குதல் என சிறப்பான பணிகளுக்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையிடம் பாராட்டுப் பெற்றது இம்மருத்துவமனை யாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டு, நன்கொடையாளர் கள் உதவியாலும், மருத்துவ அலுவலர்களின் சொந்த முயற்சி யாலும் அதிலிருந்து மீண்டு, வந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய தரச்சான்றிதழ் பெறு வதற்கான முயற்சிகளை மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ரா ஜன் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்கு வதற்கான மத்திய அதிகாரிகள் குழு (அக்.23, 24) புதன், வியாழக் கிழமை அன்று வருகை தந்து செரு வாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தது. தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ் இங்கு வழங்கப்படும் சுகாதார சேவைகள், பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகள், நோயாளிகளின் கருத்துக்களை கேட்டறிந்தது. மத்திய ஆய்வுக்குழுவில் டாக்டர் ஐ.கே.கோகர், சுனில் குமார் சர்மா ஆகியோர் இடம் பெற்றி ருந்தனர். அவர்களுடன் தஞ்சை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரவீந்திரன், தொற்றாநோய் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் வினோத் குமார், மாவட்ட பயிற்சி அலுவலர் டாக்டர் தீபக், மருத்துவ அலுவலர் பிரதீப் ராஜ், பிறப்பு மற்றும் இறப்பு இணை இயக்குநர் டாக்டர் டி.ரவிச்சந்திரன், மாவட்ட தாய்- சேய் நல அலுவலர் டாக்டர் அம்பிகா, ஆலோசகர்கள் டாக்டர் கள் ஆண்டனி, கோபாலகிருஷ் ணன், பரத் ஆகியோர் உடனிருந்த னர். மத்தியக்குழு மற்றும் மருத்து வக் குழுவினரை டாக்டர் வி. சௌந்தர்ராஜன் தலைமையில் மருத்துவர்கள், அலுவலர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் வரவேற்றனர்.