தஞ்சாவூர், ஜூலை 20- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க துவக்க விழா மற்றும் பணியேற்பு விழா சனிக்கிழமை பேராவூரணியில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக் பாபு புதிய சங்கத்தை தொடங்கி வைத்தும், சேவைத் திட்டங்களை வழங்கியும் சிறப்புரையாற்றினார். மாவட்ட முதல் துணை ஆளுநர் எஸ்.சேதுகுமார் புதிய பொறுப்பாளர்களை பதவியில் அமர்த்தியும், இரண்டாம் துணை ஆளுநர் சௌமா.இராஜ ரத்தினம் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தும் பேசினர். புதிய தலைவராக எம்.நீலகண்டன், செயலாளராக வி.ஜெய்சங்கர், பொருளாளராக எஸ்.மைதீன் பிச்சை ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பொறுப்பேற்ற னர். தொடர்ந்து கல்லூரி படிப்புக்கு மாணவிக்கு உத வித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. மேலும் பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்பவர்களுக்கும் விழாவில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.