tamilnadu

img

பண்டிகை முன் பணம், போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.23- தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசுப் போக்குவரத்து, நகரக் கிளை முன்பு, திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு பண்டிகை முன்பணம், போனஸ் வழங்கப்படாததைக் கண்டித்து போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஏஐடியுசி சங்க துணைத் தலைவர் ஜி.சண்முகம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு தலைவர் பி.முருகன் நிர்வாகிகள் ராமசாமி, திருநாவுக்கரசு, ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் எஸ். தாமரைச் செல்வன், டி.சந்திரன்உள் ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தஞ்சை புறநகர் கிளை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சை அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழக பணிமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குசிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் பி.வெங்க டேசன்தலைமை வகித்தார்.எல்.பி.எப் பணிமனைச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சா. செங்குட்டுவன்,எல்பிஎப் நிர்வாகி சுரேஷ், சிஐடியு நிர்வாகி பரத்ராஜ் மற்றும் தோழர்கள் பங்கு கொண்ட னர்.

;