tamilnadu

img

ரத்தக் கொடையாளர்களுக்கு பாராட்டு  

தஞ்சாவூர்: கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பின் சார்பில், 54 இரத்த கொடை யாளர்களை கெளரவித்து விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் மதுக்கூர் கிளை சார்பில், சமூக விழிப்புணர்வு மற்றும் இரத்தக் கொடை யாளர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி, தஞ்சை மாவட்டம், மதுக்கூர் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் கிளைத்தலைவர் ஜெ. இஜாஸ் அகமது தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், டாக்டர். குமுதா லிங்கராஜ், பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கணேச மூர்த்தி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தலைவர் வ. விவேகானந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  பின்னர், அதிகமுறை இரத்தம் வழங்கிய இரத்தக் கொடையாளர்கள் ஏ.சாகுல் ஹமீது, ஆரிப், அஃப்ரித் கான், ஜாகிர், அலெக்ஸ், சமீர் அலி உள்ளிட்ட 54 பேருக்கு விருதுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.  மேலும், கஜா புயலின் போது பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணியில் தீவிரமாக செயல் பட்ட மதுக்கூர் மின்சார வாரியம், பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய வற்றிற்கு சேவை விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, அமைப்பின் மதுக்கூர் கிளை துணைத் தலைவர் எச்.முகமது இப்ராஹீம் வரவேற்றார். நிறைவாக எம்.ரியாஸ் அகமது நன்றி கூறி னார். மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் தலைவர் டி.ஏ.கே.ஏ முகைதீன் மரைக்காயர், மதுக்கூர் காவல் ஆய்வாளர் ஆர்.செந்தில் குமார், சித்த மருத்துவர் வி.கீதா கலந்து கொண்டனர்.