தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூரில், சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்டச் செயலாளர் ஆர். தில்லைவனம், மாவட்டத் தலைவர் சேவையா, நிர்வாகி துரை.மதிவாணன், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் மோகன் ராஜ், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளர் ராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் து. கோவிந்த ராஜூ, துணைச் செயலாளர் கே. அன்பு, மாநிலக் குழு உறுப்பினர் கே.கல்யாணி, ஐஎன்டியூசி ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலத்திற்கு நிவாரணமாக ரூ 22,500 வழங்க வேண்டும். ஊரடங்கை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது. தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதர வாக மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஜூலை 3 அன்று தஞ்சை மாவட்டத்தில் 600 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.