தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நேரத்திலும் ஊழல் நடைபெற்று வருகிறது. ஊழலை தட்டிக்கேட்ட பயனா ளியை தரக்குறைவாக பேசி அடிக்க முயன்ற ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி ராமர் கோவில் தெருவில் ரேஷன் கடையில் மணி கண்டன் என்பவர் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். இந்த கடையில் ராமர்கோ வில் தெரு, புதுமனைத்தெரு, மருது பாண்டிநகர், கே.ஆர்.காலனி ஆகிய பகுதி களை சேர்ந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த கடையில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய அரிசி மற்றும் அத்தியாவசிய பொ ருட்களை முறையாக வழங்காமல் வழக்க மாக வழங்க கூடிய 20 கிலோ அரிசியை மட்டும் ஒரு சிலருக்கு வழங்கி விட்டு கார்டில் உள்ள ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் மத்திய தொகுப்பில் இருந்து வழங்கக் கூடிய அரிசியை தனியாரிடத்தில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மே மாதம் 20 அரிசி மட்டும் வழங்கி விட்டு மத்திய தொகுப்பு அரிசி வழங்கவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ரேஷன் கடை க்கு சென்ற அந்த நபர் மே மாதம் வழங்க வேண்டிய அரிசியையும், ஜூன் மாதத்திற்கு வழங்கக் கூடிய அத்தியாவசிய பொருட்க ளையும் கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன் அரிசி இல்லை வந்தால் தான் எனக் கூறியுள்ளார். கடந்த மாதம் வழங்க வேண்டிய அரிசி யையாவது கொடுங்கள் என கேட்டுள்ளார். அதுவும் கொடுக்க முடியாது கடையை விட்டு வெளியே போ என் கூறியுள்ளார். அந்த நபர் தட்டிக் கேட்டுள்ளார். அதைக் கேட்க நீ யார் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் சென்று புகார் கொடு. நீ அமைச்சர் இல்லை, முதலமைச்சர் இடத்தில் வேண்டுமானாலும் சென்று புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறி அடிக்க முயன்றுள்ளார்.
இந்த நிகழ்வு சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதே போல் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் மத்திய தொகுப்பில் இருந்து வழங்கக்கூடிய அரிசி தெரியாமல் பாமர மக்கள் வழக்கமாக வாங்கக்கூடிய 20 கிலோ விலையில்லா அரிசியை மட்டும் வாங்கி சென்று உள்ள னர். மத்திய தொகுப்பு அரிசியை ரேஷன் கடை பணியாளர்கள் மூட்டை மூட்டையாக விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி வட்ட வழங்க அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை.