தஞ்சாவூர்:
பட்டுக்கோட்டை அருகே விவசாயிஒருவர் வயலில் குழி தோண்டியபோது,அரை அடி உயரமுள்ள 5 சாமி சிலைகள்உட்பட 27 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லெனின்(63). இவர் வியாழக்கிழமை தனதுநிலத்தில் கொய்யாக் கன்று நடுவதற்காக ஒரு அடி ஆழத்தில் குழி தோண்டியபோது, அரையடி உயரமுள்ள 3 விஷ்ணு சிலைகள், ஒரு அம்மன், ஒருஆழ்வார் என 5 உலோக சிலைகள், 4 கலயங்கள், 5 கிண்ணங்கள்,1 மண் பானை ஓடு, தட்டுக்கள் உள்ளிட்ட 27 பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து உடனடியாகவிவசாயி லெனின் வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறையினருடன் சென்ற தொல்லியல்துறையினர், கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட் களை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த27 பொருட்களையும் காவல்துறை பாதுகாப்புடன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் அப்பொருட்களை பார்வையிட்டனர்.