tamilnadu

img

மெஸ்ஸிக்கு திடீர் ஓய்வு....  அதிர்ச்சியில் பார்சிலோனா ரசிகர்கள் 

மாட்ரிட் 
யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கிளப் கால்பந்து அணியான பார்சிலோனா ‘எஃப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பார்சிலோனா அணி ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலி கிளப் அணியான இன்டர் மிலன் அணியை எதிர்கொள்கிறது. இத்தாலியின் சான் சிரோ நகரில் இன்று (புதனன்று) நள்ளிரவு 1:30 மணிக்குத் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் பலமானவை என்பதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு ஓய்வு அளிப்பதாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பார்சிலோனா நிர்வாகத்தின் இந்த முடிவு ஸ்பெயின் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை உருவாகியுள்ளது. மேலும், ஜெரார்டு, செர்ஜி   ஆகியோருக்கும் ஓய்வு அளித்துள்ளது. நாக்-அவுட் சுற்றுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.  

;