உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
சீனாவின் புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் நடைபெற்று இறுதிச்சுற்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து, தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் (வயது 20), பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 250.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். பின்னர், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யன்ஷ் சிங் பன்வார் (வயது 17), 250.1 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இதன்மூலம் மொத்தம் 3 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா, பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.