கடவுளின் தேசமான கேரளத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடைபெற்று வருகி றது. இம்மாநிலத்தில் (ஆலப் புழா) படகுப் போட்டி பிரசித்தி பெற்றது. பல்வேறு பெயர் களில் படகுப்போட்டி தொடர் கள் நடைபெற்றாலும், நேரு டிராபி தொடர் தான் மிகப் பெரிய தொடராகக் கருதப் படுகிறது. தென்மேற்கு பருவ மழை சீசனில் நடத்தப்படும் இந்த தொடர் தற்போது புதிய திசையில் பயணித்துள்ளது. அதாவது உள்ளூர் கிரிக்கெட் டில் கொடிகட்டிப் பறக்கும் ஐபிஎல் தொடரைப் போல படகுப்போட்டியிலும் சாம்பி யன்ஸ் போட் லீக் (சிபிஎல்) என்ற பெயரில் லீக் தொடர் ஆகஸ்ட் 10 தொடங்கி நவம் பர் 1 அன்று (கேரளா உரு வான நாள்) வரை 3 மாதம் நடைபெறுகிறது. 5.9 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட தொடர் இந்த தொட ரில் 9 அணிகள் பங்கேற்கின் றன. படகுப்போட்டிகள் பெரும்பாலும் ஆலப்புழா, கொச்சி பகுதிகளில் மட் டுமே நடத்தப்பட்டுவந்த நிலையில், சாம்பியன்ஸ் போட் லீக் (சிபிஎல்) கேரளா முழுவதும் நடத்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு தொலை நோக்குப் பார்வையுடன் அட்டவணை தயாரித்துள் ளது.
அணிகள் - 9
டிராப்பிக்கல் டைட் டன்ஸ், பேக்வாட்டர் நைட்ஸ், பேக்வாட்டர் நிஞ்ஜா, பேக் வாட்டர் வாரியர்ஸ், கோஸ்ட் டாமினேட்டர்கள், மைட்டி ஓர்ஸ், பிரைட் சேஸர்ஸ், ரேஜிங் ரோவர்ஸ், தண்டர் ஓர்ஸ்.
சுற்றுகள்
லீக், நாக் அவுட் சுற்று முறையில் நடைபெறும் இந்த தொடரின் இறுதிப்போட்டி கேரள தலைநகர் திரு வனந்தபுரத்திற்கு வடக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள அஷ்டமுடி ஏரியில் (கொல் லம்) நடைபெற உள்ளது.
பரிசுத்தொகை
சிபிஎல்-லின் மொத்த பரிசுத் தொகை ரூ.5.9 கோடி. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று வெற்றியாளர் களுக்கு முறையே ரூ.5 லட் சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் கிடைக்கும். மேலும், பங்கேற் பாளர்கள் அனைவருக்கும், ஒவ்வொரு போட்டியிலும் ரூ.4 லட்சம் பரிசு (போனஸ்) கிடைக்கும். இது இந்தியா வில் நடத்தப்படும் விளை யாட்டு தொடர்களில் நான்கா வது அதிகப்படியான பரி சுத்தொகை என்பது குறிப்பி டத்தக்கது.