tamilnadu

img

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ரபேல் நடால் தோல்வி

நேற்று இரவு நடைபெற்ற மேட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட்டில் இந்தாண்டின் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நடந்த அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடாலும், கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாஸும் மோதினர். இப்போட்டியில் 17முறை கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள ரபேல் நடால் 4-6, 6-2 மற்றும் 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் சிட்சிபாஸ் இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


ஏற்கனவே நடந்த மற்றொரு அரையிறுதியில் செர்பியா நாட்டு வீரர் ஜோகோவிச் ஆஸ்திரிய நாட்டு வீரரான டோமினிக் தெயிமை 7-6, 7-6 என்ற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதனால் இன்று நடைபெறவுள்ள மேட்ரிட் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சும், சிட்சிபாஸும் கடுமையாக போராடவுள்ளனர்.


;