tamilnadu

img

மீண்டும் உடை சர்ச்சை

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.தற்போது முதல் சுற்று நிறைவடைந்து 2வதுசுற்று ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனாவில்லியம்ஸ் உடை சர்ச்சையில் சிக்கி யுள்ளார். கடந்தாண்டு பிரெஞ்சு ஓபன்தொடரில் “கேட்” எனப்படும் (நீச்சல் உடைபோன்று) கறுப்பு நிற உடை அணிந்து பங்கேற்றார். செரீனாவின் உடையை பார்த்து ரசிகர்கள், டென்னிஸ் ஆர்வலர்கள் முகம் சுளிக்கப் பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பு கேட் ஆடைக்குத் தடை விதித்தது. தடையைக் கண்டுகொள்ளாத செரீனா பாலே நடனக்கலைஞர்கள் அணியும் ‘டூடு’ (டைட்டான ஆடை) என்ற ஆடையை அணிந்து பதிலடி கொடுத்தார். நடப்பாண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா தாய்க்குலமாகக் களமிறங்குவதால் உடை விவகாரத்தில் சர்ச்சையை உருவாக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை கானல் நீரைப் போன்று காணாமல் செய்த செரீனா நேவி மற்றும் வெள்ளை நிறம் கலந்த ‘டூ-பீஸ்’உடையை (மாடலிங் நீச்சல் உடை) அணிந்துகளமிறங்கினார். போட்டியில் களமிறங்கு வதற்கு முன் அணியும் மேலாடையில் சாம்பியன்,ராணி, பெண் கடவுள் என்ற வாசகம் பிரெஞ்சு மொழியில் இடம் பெற்றிருந்தது.இதுரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.  உடை சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வரும் செரீனாவுக்கு பிரெஞ்சு டென்னிஸ் கடும்எச்சரிக்கை தெரிவித்துள்ளது.சாம்பியன் பட்டத்தை விட சர்ச்சை பட்டம் அதிகம் பெற்றிருக்கும் செரீனா சர்வதேச டென்னிஸ் அரங்கில்800-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.