tamilnadu

img

தொடர் மழை காரணமாக டில்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதுடில்லி: 
தொடர் மழை காரணமாக டில்லி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வட மாநிலங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. 
இந்நிலையில் கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் வெள்ளத்தின் அளவு அபாய கட்டத்தை  தாண்டும் என அஞ்சப்படுகிறது. 

இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.டில்லியில் இன்னும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

;