ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது. ஜப்பானில் இன்று சுசிமா தீவை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுவிக்கப்படவில்லை. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.