tamilnadu

img

ஜப்பான் கப்பலை விட்டு வெளியேறும் பயணிகள்!

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து பயணிகள் இன்று வெளியேறி வருகின்றனர்.

சீனாவின் உகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையில், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் இருந்த சிலருக்கு  கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தால், 3,711 பேருடன் அந்த கப்பல் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், 542 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, இன்று சுமார் 500 பேர் மட்டுமே வெளியேறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மருத்துவ பரிசோதனை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வருவதைப் பொருத்து, அனைத்து பயணிகளும் வெளியேற இன்னும் மூன்று நாட்கள் வரை ஆகலாம் என கூறப்பட்டுள்ளது.