ஏற்காடு, செப்.19- ஏற்காடு தூய இருதய பள்ளியின் முதல் வருக்கு தமிழக அரசின் சார்பில் நல்லா சிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு தூய இருதய ஆங்கிலே-இந்தியன் மேல்நிலைப் பள்ளி தற்போது 125ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இப்பள்ளியில் கடந்த 11 ஆண்டுகளாக முதல்வராக அருட்சகோதரி நான்சி பணியாற்றி வருகிறார். இவரது ஆசிரியப் பணியை பாராட்டி தமிழக அரசின் சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கேட்டையன், டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை வழங்கி கவுரவித்துள்ளார். பள்ளி முதல்வர் நான்சி முதுகலை வரலாறு மற்றும் இளங்கலை கல்வியியல் படித்துள்ளார். இவர் இப்பள்ளியின் முதல் வராக பதவியேற்ற பின் பொதுத் தேர்வுகளில் மாணவிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்து வருகின்றனர். மேலும் இப்பள்ளி மாணவிகள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கம் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். விருதுபெற்ற பள்ளி முதல்வரை, பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பள்ளி முன்னாள் மாணவிகள் மற்றும் பெற் றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.