சேலம்,மே 23- பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காய்கறி லாரி யில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா மூட்டைகளை சேலம் மாநகர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை விற்ப னைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலும் தங்குதடையின்றி குட்கா விற்பனை நடைபெற்று வரு கிறது. தற்போது நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்ஊரடங்கு உத்த ரவு அமல்படு த்தப்பட்டு ள்ளதால், மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்ய ப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் புகையிலை, குட்கா பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தொ டர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், பெங்களூ ருவில் இருந்து காய்கறி லாரி யில் சேலம்வழியாக மது ரைக்கு குட்கா மூட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக சேலம் மாநகர காவல் துறைக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன டிப்படையில் கொண்ட லாம்பட்டி சோதனைச்சா வடியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரிலிருந்து மது ரைக்கு முட்டைக்கோஸ் ஏற்றிச்சென்ற லாரியில் 24 குட்கா மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத னையடுத்து கொண்ட லாம்பட்டி காவல் துறையி னர் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த னர். தொடர்ந்து லாரி ஓட்டுநர் ஜம்புவைகைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.