tamilnadu

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை

சேலம், டிச. 25- ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப் பதிவு நாளன்று அனைத்து தொழி லாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள் ளது.  இதுகுறித்து சேலம் தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார இணை இயக் குநர் புகழேந்தி வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, பிரிவு 80ஏ-ன்  படி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் வரும் டிச.27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தொழிற்சாலை தொழிலாளர்கள் வாக்க ளிக்க ஏதுவாக, அந்தந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் வாக்குப்பதிவு நாளன்று அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  எனவே தொழிற்சாலை நிர்வாகத்தி னர் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி விடுமுறை அளித்து ஒத்துழைப்பு கொடுக் குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ் வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;